27 14
உலகம்செய்திகள்

உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் நேரடியாக களமிறங்கிய வட கொரியா

Share

உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் நேரடியாக களமிறங்கிய வட கொரியா

உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் வகையில், வட கொரியாவிலிருந்து 3,000 இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், வட கொரியாவின் இராணுவ வீரர்கள் ரஷ்யாவில் களமிறக்கப்பட்டுள்ளதை ஆதாரங்கள் வெளிப்படுத்துவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த வட கொரிய இராணுவத்தினர் ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிடத் தொடங்கினால் அது பெரிய ஆபத்தை விளைவிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யுத்தத்தில் வட கொரியாவின் செயற்பாட்டை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் 10,000 வட கொரிய படையினர், உக்ரைனுக்கு எதிரான போரில் இணையலாம் என நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி அறிவித்திருந்தமை குறிப்பிடத்க்கது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...