19
உலகம்செய்திகள்

உக்ரைனுக்கு எதிராக களமிறங்கிய வடகொரிய படைவீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

Share

உக்ரைனுக்கு எதிராக களமிறங்கிய வடகொரிய படைவீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் களமிறக்கப்பட்டுள்ள வடகொரிய படைவீரர்களை உக்ரைன் படையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வடகொரியாவின் உயரடுக்கு வீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனிய தரப்பு, செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் மேற்கத்தைய நாடுகளுக்கு எதிராகவும் ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் வடகொரியா களமிறங்கியுள்ளது.

போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய ஆயுதங்களுடன் படைவீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனால் கைப்பற்றப்பட்ட குர்ஸ்க் பகுதியை மீட்க ரஷ்யா போராடி வரும் நிலையில், குறித்த பிராந்தியத்தில் களமிறக்கப்பட்ட வடகொரிய படைவீரர்களே கடுமையான தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், வடகொரிய வீரர்கள் குறித்து நாம் அச்சப்படவில்லை எனவும் வடகொரிய வீரர்களை ஒரு இக்கட்டான நிலைக்கு ரஷ்யா தள்ளியுள்ளது என்றும் உக்ரைனிய மூத்த தளபதி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....