19
உலகம்செய்திகள்

உக்ரைனுக்கு எதிராக களமிறங்கிய வடகொரிய படைவீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

Share

உக்ரைனுக்கு எதிராக களமிறங்கிய வடகொரிய படைவீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் களமிறக்கப்பட்டுள்ள வடகொரிய படைவீரர்களை உக்ரைன் படையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வடகொரியாவின் உயரடுக்கு வீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனிய தரப்பு, செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் மேற்கத்தைய நாடுகளுக்கு எதிராகவும் ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் வடகொரியா களமிறங்கியுள்ளது.

போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய ஆயுதங்களுடன் படைவீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனால் கைப்பற்றப்பட்ட குர்ஸ்க் பகுதியை மீட்க ரஷ்யா போராடி வரும் நிலையில், குறித்த பிராந்தியத்தில் களமிறக்கப்பட்ட வடகொரிய படைவீரர்களே கடுமையான தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், வடகொரிய வீரர்கள் குறித்து நாம் அச்சப்படவில்லை எனவும் வடகொரிய வீரர்களை ஒரு இக்கட்டான நிலைக்கு ரஷ்யா தள்ளியுள்ளது என்றும் உக்ரைனிய மூத்த தளபதி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...