12 20
உலகம்செய்திகள்

முதன்முறையாக உக்ரைனிடம் சிக்கிய வடகொரிய இராணுவத்தினர்

Share

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருந்த இரண்டு வடகொரிய இராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுடன் இணைந்து சண்டையிட வடகொரியா தமது படைகளை அனுப்பியிருந்தது.

உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தரவுகளுக்கமைய ஏறத்தாழ, 10,000 வட கொரிய வீரர்கள் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டு வட கொரிய வீரர்களை சிறைபிடித்ததாக கூறும் உக்ரைன் ஜனாதிபதி, முதன்முறையாக வடகொரிய வீரர்கள் உக்ரைனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், போரின் போது, கைது செய்யப்படுவோருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் மருத்துவ உதவிகளும் வடகொரிய வீரர்களுக்கும் வழங்கப்படும் என ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரையும், உக்ரைன் இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புக்கள் தென்கொரிய உளவுத்துறை அதிகாரிகளின் உதவியுடன் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...