12 20
உலகம்செய்திகள்

முதன்முறையாக உக்ரைனிடம் சிக்கிய வடகொரிய இராணுவத்தினர்

Share

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருந்த இரண்டு வடகொரிய இராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுடன் இணைந்து சண்டையிட வடகொரியா தமது படைகளை அனுப்பியிருந்தது.

உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தரவுகளுக்கமைய ஏறத்தாழ, 10,000 வட கொரிய வீரர்கள் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டு வட கொரிய வீரர்களை சிறைபிடித்ததாக கூறும் உக்ரைன் ஜனாதிபதி, முதன்முறையாக வடகொரிய வீரர்கள் உக்ரைனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், போரின் போது, கைது செய்யப்படுவோருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் மருத்துவ உதவிகளும் வடகொரிய வீரர்களுக்கும் வழங்கப்படும் என ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரையும், உக்ரைன் இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புக்கள் தென்கொரிய உளவுத்துறை அதிகாரிகளின் உதவியுடன் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...