12 20
உலகம்செய்திகள்

முதன்முறையாக உக்ரைனிடம் சிக்கிய வடகொரிய இராணுவத்தினர்

Share

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருந்த இரண்டு வடகொரிய இராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுடன் இணைந்து சண்டையிட வடகொரியா தமது படைகளை அனுப்பியிருந்தது.

உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தரவுகளுக்கமைய ஏறத்தாழ, 10,000 வட கொரிய வீரர்கள் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டு வட கொரிய வீரர்களை சிறைபிடித்ததாக கூறும் உக்ரைன் ஜனாதிபதி, முதன்முறையாக வடகொரிய வீரர்கள் உக்ரைனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், போரின் போது, கைது செய்யப்படுவோருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் மருத்துவ உதவிகளும் வடகொரிய வீரர்களுக்கும் வழங்கப்படும் என ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரையும், உக்ரைன் இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புக்கள் தென்கொரிய உளவுத்துறை அதிகாரிகளின் உதவியுடன் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...