tamilnih scaled
உலகம்செய்திகள்

3 ஏவுகணை சோதனைகளை நடத்த காத்திருக்கும் வடகொரியா

Share

இந்த ஆண்டில் (2024) ஆண்டில் மேலும் 3 ராணுவ உளவு செயற்கைக்கோள்களை ஏவ உள்ளதாக வடகொரியா ஜனாதிபதி கிம்ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்கள், நவீன ஆளில்லா போர் உபகரணங்களை கட்டமைத்து மிகப்பெரிய போர் பதிலடி திறன்களை பெறுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்க சரியான இராணுவ தயார் நிலையை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது.

அமெரிக்கா- தென்கொரியா இணைந்து எப்போது வேண்டுமென்றாலும் வடகொரியா மீது போர் தொடுக்கலாம் என வடகொரியா ஜனாதிபதி கிம்ஜாங் உன் நினைக்கிறார்.

இதனால் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை முறியடிக்க, தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி வடகொரிய இராணுவத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக வடகொரியா ஏவிய இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவியமைக்கு தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...