24 66aa22653b25e
உலகம்

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

Share

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

வடகொரியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

சீன எல்லை நகரங்களான Sinuiju மற்றும் Uiju ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Uiju மாவட்டத்தில் சுமார் 4000 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக வடகொரிய அரச ஊடகமான KCNA தெரிவித்துள்ளது.

சுமார் 3000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஜனாதிபதி கிம் ஜொங் உன் (Kim Jong Un) நேரடியாக களத்தில் இறங்கி வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார். அவர் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

படகு மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமையை மதிப்பீடு செய்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வெள்ளத்தைத் தொடர்ந்து, தலைவர் கிம் ஜாங் உன் நாட்டில் அவசர நிலையை அறிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

STK022 ELON MUSK CVIRGINIA F
செய்திகள்உலகம்

உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் வாய்ப்பு: எலான் மஸ்க்கின் ரூ. 1 ட்ரில்லியன் ஊதியக் கோரிக்கைக்கு டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்புதல்!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், தனக்கு 1 ட்ரில்லியன் டாலர்...

Romance Scams in Canada 1024x560 1
செய்திகள்உலகம்

கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...

images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...