24 66aa22653b25e
உலகம்

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

Share

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

வடகொரியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

சீன எல்லை நகரங்களான Sinuiju மற்றும் Uiju ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Uiju மாவட்டத்தில் சுமார் 4000 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக வடகொரிய அரச ஊடகமான KCNA தெரிவித்துள்ளது.

சுமார் 3000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஜனாதிபதி கிம் ஜொங் உன் (Kim Jong Un) நேரடியாக களத்தில் இறங்கி வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார். அவர் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

படகு மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமையை மதிப்பீடு செய்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வெள்ளத்தைத் தொடர்ந்து, தலைவர் கிம் ஜாங் உன் நாட்டில் அவசர நிலையை அறிவித்தார்.

Share
தொடர்புடையது
world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...

world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

Untitled 22
உலகம்செய்திகள்

ஒபாமா – மிஷெல் தம்பதியிடையே நீடிக்கும் ‘அரசியல்’ பதற்றம்: டொனால்ட் டிரம்ப் குறித்து ஒபாமா கருத்து

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், டொனால்ட் டிரம்பின் இரண்டாவது...

Untitled 20
செய்திகள்உலகம்

டிரம்பின் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ நிறுத்தம்: சர்வதேச சந்தையில் 100 டொலருக்குக் கீழ் சரிந்த கச்சா எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரவும், ஈரானுடன் ஒரு இறுதி உடன்பாட்டை...