24 66aa22653b25e
உலகம்

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

Share

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

வடகொரியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

சீன எல்லை நகரங்களான Sinuiju மற்றும் Uiju ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Uiju மாவட்டத்தில் சுமார் 4000 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக வடகொரிய அரச ஊடகமான KCNA தெரிவித்துள்ளது.

சுமார் 3000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஜனாதிபதி கிம் ஜொங் உன் (Kim Jong Un) நேரடியாக களத்தில் இறங்கி வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார். அவர் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

படகு மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமையை மதிப்பீடு செய்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வெள்ளத்தைத் தொடர்ந்து, தலைவர் கிம் ஜாங் உன் நாட்டில் அவசர நிலையை அறிவித்தார்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...

23 9
செய்திகள்உலகம்

நெதன்யாகுவைக் துரத்திச் சென்று அழிப்போம்: தீவிரமடையும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கொல்வோம்...

22 12
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஆரோக்கியமாக உள்ளார்: வெளியுறவு அமைச்சர் தகவல்

ஈரானின் புதிய உச்ச தலைவராக கடந்த மார்ச் 8ஆம் திகதி பதவியேற்ற மொஜ்தபா கமேனி, பதவியேற்பிற்குப்...