Nigeria iii
உலகம்செய்திகள்

நைஜீரியா – சிறை தகர்ப்பு! – 240 கைதிகள் தப்பிப்பு

Share

நைஜீரியா – கோசி மாகாணத்தில் ஹப்பா நகரிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுப்புச் சுவரை சக்தி வாய்ந்த வெடி குண்டு மூலம் தகர்த்து உள் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் சிறையிலிருந்து 240 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.  2 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சிறையில் 224 விசாரணை கைதிகள் மற்றும் 70 குற்றவாளிகள் உள்ளிட்ட மொத்தம் 294 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பயங்கரவாதிகள் சிறைச்சாலையின் தடுப்பு சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து உள்ளே நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை துரிதகதியில் நடைபெறுகிறது. கைதிகள் பற்றிய தகவலை இன்டர்போல் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம். கைதிகளை தப்பவைத்து பயங்கரவாதிகளையும் விரைவில் பிடிப்போம் – என அந் நாட்டு உள்துறை அமைச்சர் ராப் அரெக்பசுலோ தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...