24 662eafc6bf85e
உலகம்செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா

Share

இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu) போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அத்தோடு, பலஸ்தீனம் உடனான போரில் அதிகமான விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறானதொரு போருக்கே அவசியம் இல்லை என்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 34 000 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் அதில், பெண்களும், குழந்தைகளுமே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, போர் நிறுத்ததை கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (United Nations Security Council, UNSC) பலஸ்தீன ஆதரவு நாடுகளின் தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ரத்து செய்து வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், தனது நட்பு நடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தினால் (International Court of Justice) பிடியாணை பிறப்பிக்கப்படவிருப்பது தொடர்பில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...