24 663e3effbb0c7
உலகம்செய்திகள்

ஹமாஸுக்கு எதிராக தனியே களமிறங்கிய இஸ்ரேல்

Share

ஹமாஸுக்கு எதிராக தனியே களமிறங்கிய இஸ்ரேல்

ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று போரிட தயாரென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளாா்.

ஆயுத விநியோகத்தை நிறுத்துவதாக அமெரிக்கா (America) எச்சரித்துள்ள நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தென் காஸாவில் அமைந்துள்ள ரபா (Rafa) நகரில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால் இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் வழங்குவதை நிறுத்துவோமென அமெரிக்க அதிபா் ஜோ பைடன் (Joe Biden) நேற்றைய தினம் (9) எச்சரித்திருந்தார்.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில், “ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிட வேண்டிய சூழல் உருவானால் தனித்து நிற்கவும் தயாா். அத்தோடு விரல் நகங்களால் கூட நாங்கள் சண்டை போடுவோம்.

ஆனால் விரல் நகங்களை விட பலமான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ரபா மீதான தாக்குதலுக்குப் போதுமான ஆயுதங்கள் தங்கள் வசமிருப்பதாக இஸ்ரேல் இராணுவச் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...