24 663e3effbb0c7
உலகம்செய்திகள்

ஹமாஸுக்கு எதிராக தனியே களமிறங்கிய இஸ்ரேல்

Share

ஹமாஸுக்கு எதிராக தனியே களமிறங்கிய இஸ்ரேல்

ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று போரிட தயாரென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளாா்.

ஆயுத விநியோகத்தை நிறுத்துவதாக அமெரிக்கா (America) எச்சரித்துள்ள நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தென் காஸாவில் அமைந்துள்ள ரபா (Rafa) நகரில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால் இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் வழங்குவதை நிறுத்துவோமென அமெரிக்க அதிபா் ஜோ பைடன் (Joe Biden) நேற்றைய தினம் (9) எச்சரித்திருந்தார்.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில், “ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிட வேண்டிய சூழல் உருவானால் தனித்து நிற்கவும் தயாா். அத்தோடு விரல் நகங்களால் கூட நாங்கள் சண்டை போடுவோம்.

ஆனால் விரல் நகங்களை விட பலமான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ரபா மீதான தாக்குதலுக்குப் போதுமான ஆயுதங்கள் தங்கள் வசமிருப்பதாக இஸ்ரேல் இராணுவச் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
14 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரந்தகஹமுல களஞ்சியசாலையைத் திறந்த அரசு: அரிசி விலை உயர்வுக்குத் தீர்வு!

இலங்கையின் அரிசி விலை நிர்ணயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மரந்தகஹமுல (Marandagahamula) களஞ்சியத் தொகுதியை, 13...

13 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ருவன்வெல்லையில் வாகன ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: பெரும் சேதம்!

ருவன்வெல்ல, கரவனல்ல நகரில் அமைந்துள்ள வாகன ஸ்டிக்கர் ஒட்டும் கடை ஒன்றில் இன்று (14) காலை...

12 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளை விசாரிக்க 150 அதிகாரிகள் கொண்ட புதிய குழு நியமனம்!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவாக விசாரணை நடத்துவதற்காக, 150...

11 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு மாநகர சபையின் புதிய முன்னெடுப்பு: மக்களின் மன அழுத்தத்தைப் போக்க ‘சித் சுவ புரவர’ வேலைத்திட்டம்!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மன அழுத்தத்திலிருந்து அவர்களை...