12 14
உலகம்செய்திகள்

விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள நாசாவின் யூரோபா கிளிப்பர் விண்கலம்

Share

விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள நாசாவின் யூரோபா கிளிப்பர் விண்கலம்

கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுகளுக்காக இதுவரை உருவாக்கப்பட்ட விண்கலங்களில் மிகப்பெரியதான நாசாவின் யூரோபா கிளிப்பர் (Europa Clipper) விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விண்கலமானது, வியாழன் கிரகத்தின் சந்திரனான யூரோபாவை ஆராய்வதற்காக கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.

யூரோபா கிளிப்பரினால், ஈர்ப்பு உதவிகளை பயன்படுத்தி 1.8 பில்லியன் மைல்கள் பயணிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2030ஆம் ஆண்டில், வியாழனை அடைந்த பிறகு, அது யூரோபாவில் வாழக்கூடிய நிலத்தடி கடலை பற்றி ஆராய தொடங்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐஸ் – ஊடுருவக்கூடிய ரேடார் மற்றும் வெப்ப இமேஜிங் உள்ளிட்ட அதி நவீன கருவிகளுடன் பொருத்தப்பட்ட இந்த விண்கலம், நமது சூரிய குடும்பத்திலும் அதற்கு அப்பாலும் வாழும் தன்மை பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்க கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதேவேளை, வியாழன் கிரகத்தின் சந்திரனான யூரோபாவில் உயிர்கள் வாழ முடியுமா என்பதைக் கண்டறிவதும் யூரோபா விண்கலத்தின் நோக்கமாக உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...