download 5 1 11
இலங்கைஉலகம்செய்திகள்

அநீதிக்கு எதிராகப் போராடவேண்டியதன் பொறுப்பை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுறுத்துகிறது – அமெரிக்க காங்கிரஸ் தெரிவிப்பு!

Share

அநீதிக்கு எதிராகப் போராடவேண்டியதன் பொறுப்பை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுறுத்துகிறது – அமெரிக்க காங்கிரஸ் தெரிவிப்பு!

அநீதிக்கு எதிராகப் போராடவேண்டிய பொறுப்பையும், மக்களனைவரும் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய உலகைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் நினைவூட்டுவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் விலி நிக்கெல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற 26 வருடகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான நேற்று முன்தினம் 18 ஆம் திகதி இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறிப்பாக பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளில் புலம்பெயர் தமிழர்களால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அவற்றில் அந்நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

அதன்படி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலன்று பிரிட்டனின் வெஸ்ட்மினிஸ்டர் மாளிகைக்கு அருகாமையில் ஒன்றுகூடிய அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள், போரில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்ததுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்குத் தமது ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

அதேபோன்று பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனாக்கின் இல்லத்துக்கு முன்பாக ‘பொதுமக்களுக்கு எதிரான போர்’ மற்றும் ‘இலங்கை: மரணங்களை எண்ணும் செயற்திட்டம்’ என்னும் மகுடங்களில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதேவேளை இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பிரிட்டனின் நிழல் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமி, ‘பிரிட்டன் அரசாங்கம் தமிழ்மக்களுக்கு ஆதரவளித்துச் செயற்படுவதுடன், இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என்ற பரிந்துரைகள் குறித்துக் கவனம்செலுத்தவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழினப்படுகொலை நினைவு நாளில் உயிரிழந்தவர்களையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், தமிழர்களின் மீண்டெழும் தன்மையையும் நினைவுகூருவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் விலி நிக்கெல், ‘அநீதிக்கு எதிராகப் போராடுவதற்கான எமது பொறுப்பையும், அனைவரும் அமைதியானதும் சுதந்திரமானதுமான முறையில் வாழக்கூடிய உலகைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் எமக்கு நினைவூட்டட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்திருக்கும் சுவிஸ்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஃபெயின் மொலினா, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

#world

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Canned Fish 1200px 22 11 06 1000x600 1
செய்திகள்இலங்கை

டின் மீன் வகைகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை...

AA1QtdSx
செய்திகள்உலகம்

தென் கொரியா சியோனானில் பாரிய தீ விபத்து: இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு 129 தீயணைப்பு வீரர்கள் முயற்சி!

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1 1
செய்திகள்இலங்கை

விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் நடந்த மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என...

fc8354edbbb9260d3534c77dcb0e01de 1200
செய்திகள்உலகம்

வெளிநாட்டு மாணவர் கட்டணத்தில் 6% புதிய வரி:  பிரித்தானியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அதிருப்தி!

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் மீது பிரித்தானிய அரசாங்கத்தால் விதிக்கப்படவுள்ள புதிய வரித் திட்டம் குறித்து,...