இலங்கை
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வு
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வு
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த அகழ்வு நடவடிக்கை இன்று (23.11.2023) காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிபதியின் அனுமதியுடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.