செய்திகள்உலகம்

சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை பெற்றெடுத்த எம்.பி.

mp
Share

பிரசவ வலியோடு துவிச்சகரவண்டியில் மருத்துவமனைக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குழந்தையினைப் பிரசவித்துள்ளார்.

இச்சம்பவமானது நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான 41 வயதான ஜூலி அன்னே ஜெண்டருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.

அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே மருத்துவமனையிருப்பதால், அவர் தனது துவிச்சக்கரவண்டியில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

மருத்துவமனைக்குச் சென்ற 10 நிமிடத்திலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் தற்போதும் நலமாக உள்ளனர்.

இதனிடையே பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை பெற்றெடுத்தது குறித்து ஜூலி, பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்தப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்ட உண்மையிலேயே நான் திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து முடிந்துவிட்டது எனப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி, இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...