11 13
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் விடயத்தில் ட்ரம்பை நிராகரித்த மோடி

Share

காஷ்மீர் விடயத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தராக செயற்படுவதை நாம் விரும்பவில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசி மூலம் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இந்தியா அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த விடயத்தில் எந்தவொரு தரப்பினரும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், போர் நிறுத்தம் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக இருந்த போதிலும் இதில் அமெரிக்காவின் தலையீடு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

இதனையடுத்து, முப்படை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் இந்திய பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்தே, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுடன் மோடி கலந்துரையாடினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

இதனையடுத்து, பாகிஸ்தான், சிறிய அளவில் அத்துமீறலில் ஈடுபட்டாலும் பெரியளவிலான தாக்குதல்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...