11 13
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் விடயத்தில் ட்ரம்பை நிராகரித்த மோடி

Share

காஷ்மீர் விடயத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தராக செயற்படுவதை நாம் விரும்பவில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசி மூலம் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இந்தியா அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த விடயத்தில் எந்தவொரு தரப்பினரும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், போர் நிறுத்தம் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக இருந்த போதிலும் இதில் அமெரிக்காவின் தலையீடு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

இதனையடுத்து, முப்படை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் இந்திய பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்தே, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுடன் மோடி கலந்துரையாடினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

இதனையடுத்து, பாகிஸ்தான், சிறிய அளவில் அத்துமீறலில் ஈடுபட்டாலும் பெரியளவிலான தாக்குதல்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...