உலகம்செய்திகள்

ரஷ்ய ஜெனரலிடம் இளம்பெண் கொடுத்த மொபைல் போன்: அதிரவைக்கும் சம்பவம்

Share

ரஷ்ய ஜெனரலிடம் இளம்பெண் கொடுத்த மொபைல் போன்: அதிரவைக்கும் சம்பவம்

புடினுடைய ஜெனரல் ஒருவரிடம் பெண் ஒருவர் கொடுத்த மொபைல் வெடித்துச் சிதறியதில், அவரும் அவரது மகனும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்ய ஜெனரல்களில் ஒருவரான Yuri Afanasevskii (64) Luhanskஇல் உள்ள தனது வீட்டிலிருக்கும்போது, பெண் ஒருவர் அவருக்கு மொபைல் போன் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அவர் அந்த போனை ஆன் செய்தவுடன், அது பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. போன் வெடித்ததில் படுகாயமடைந்த Yuriயும் அவரது மகனும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருடைய மனைவிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்தப் பெண் கைது செய்யபட்டுள்ளார். ஜெனரலை கொல்ல முயற்சி என்னும் கோணத்தில் ரஷ்ய அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உக்ரைன் உளவுத்துறை இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் தரப்பில் அந்த மொபைல் போனுக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை Yuriயிடம் கொண்டு சேர்க்க அந்த பெண்ணை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் எராளமானோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த கொலை முயற்சி சம்பவத்துடன் தொடர்புடைய பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...