12 2 scaled
உலகம்செய்திகள்

சரக்கு கப்பலை இலக்கு வைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

Share

சரக்கு கப்பலை இலக்கு வைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏடன் வளைகுடாவில், ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையால் சரக்கு கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளதோடு மூவர் கொள்ளப்பட்டுள்ளனதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அதில் இருந்த 21 பணியாளர்களை இந்திய போரக்கப்பலான ஐஎன்ஏஎஸ் கொல்கத்தா மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, மீட்கப்பட்டவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாகவும், அவர்களில் ஒருவர் ஏவுகணை தாக்குதலால் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் 6 ஆம் திகதியன்று பார்படோஸில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த சரக்கு கப்பல், ஏடனுக்கு தென்மேற்கே 55 கடல் மைல் தொலைவில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த தாக்குதலில் கப்பலில் தீப்பற்றியதாகவும் பல பணியாளர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு விரைவில் சென்ற இந்திய கடற்படையினர், உலங்கு வானூர்தி மற்றும் படகுகளைப் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர் காயமடைந்த பணியாளர்களுக்கு கப்பலின் மருத்துவக் குழு முக்கிய மருத்துவ உதவிகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை பாதிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
images 11
செய்திகள்இந்தியா

20 இலட்சம் புத்தகங்களின் சேகரிப்பாளர்: பத்மஸ்ரீ அன்கே கவுடாவின் அரிய சாதனை!

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரத்தைச் சேர்ந்த 79 வயதான அன்கே கவுடா (Anke...

26 698472524cf78
செய்திகள்உலகம்

பிரான்ஸில் சீன உளவாளிகள் கைது: Airbnb வீட்டின் தோட்டத்தில் செயற்கைக்கோள் கருவி மூலம் ரகசியத் தகவல் சேகரிப்பு!

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிராமப்புற வீடு ஒன்றிலிருந்து தகவல்களைத் திரட்டியதாகக் சந்தேகிக்கப்படும் சீன உளவாளிகள்...

trump wh af1 feb 6 1770433049681 hpMain
செய்திகள்உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் அமெரிக்காவில் கூடுதல் வரி: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

ஈரானிய அரசாங்கத்தின் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில், அந்த நாட்டுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்ட...

26019077 tn13
செய்திகள்இந்தியா

இந்தியாவின் பாதுகாப்பு பலம்: 3,000 கி.மீ தூரம் பாயும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி!

இந்தியா தனது அணு ஆயுத பலத்தை நிரூபிக்கும் வகையில், தரை விட்டு தரை பாயும் அக்னி-3...