4 32
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுக்கு பறந்த கடிதம்

Share

புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுக்கு பறந்த கடிதம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இத்தாலியை முன்மாதிரியாகக் கொண்டு புலம்பெயர் மக்களை நாடுகடத்த வேண்டும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா தெரிவித்துள்ளதாக சர்வதேச நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி புலம்பெயர் மக்கள் விவகாரத்தை மையமாகக் கொண்டு உச்சிமாநாட்டை நடத்துகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றைய தலைவர்களுக்கு உர்சுலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், புலம்பெயர்ந்தோரின் நாடுகடத்தலை அதிகரிப்பதற்கான சட்டத்திற்கான புதிய திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகிகள் முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வார தொடக்கத்தில் அல்பேனியாவில் உள்ள மையத்திற்கு இத்தாலி சில புலம்பெயர் மக்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

அந்தவகையில், கடந்த புதன்கிழமை 16 ஆண்கள் அல்பேனிய துறைமுகமான ஷெங்ஜினுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும், சில மணி நேரத்திற்கு பின்னர், அதில் இருவர் சிறார்கள் என்றும், இருவர் மருத்துவ உதவி தேவைப்படுபவர் என வெளியானதை அடுத்து, அவர்கள் இத்தாலிக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் புலம்பெயர் மக்களை மூன்றாவது நாட்டிற்கு அனுப்பிவைக்கும் திட்டத்தை பரிசீலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மக்களை உகாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை நெதர்லாந்து அரசாங்கமும் பரிசீலனைக்கு எடுத்துள்ளது.

இத்தாலி அரசாங்கம் முன்னெடுத்துள்ள அல்பேனியா திட்டத்திற்கு 650 மில்லியன் யூரோ செலவாகியுள்ளதுடன் கர்ப்பிணிகள், சிறார்கள் மற்றும் பலவீனமான நபர்களை அல்பேனியா அனுப்பும் திட்டத்தில் இருந்து இத்தாலி விலக்கு அளித்துள்ளது.

இருப்பினும் வலதுசாரி அரசியல்வாதியான பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...