205b0a345971e1e29e6a6b892515dbed1999f4f1 1597338164 5f357234 1200x630 1
உலகம்செய்திகள்

பிரான்சிலிருந்து புறப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது

Share

பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்தோர் புறப்பட்ட படகு ஒன்று ஆங்கிலக்கால்வாயில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நான்கு பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்தோர் புறப்பட்ட படகு ஒன்று, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் ஆங்கிலக்கால்வாயில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த துயர சம்பவத்தில் நான்கு பேர் பலியான நிலையில், கடற்கரையில் மேலும் ஒரு புலம்பெயர்வோரின் உடல் கரையொதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. உயிரிழந்தோர், சிரியா நாட்டவர்கள் என கருதப்படுகிறது.

மேலும், கடுங்குளிரில் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த சுமார் 30 பேரை மீட்டதாக பிரான்ஸ் கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...