மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தன் கணவனை அழைத்துச் சென்ற பெண்ணொருவர், அவர் மீது காரை ஏற்றிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் வாழும் கணவர்கள் எல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் வாழவேண்டும் போலிருக்கிறது.
ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவியான சோனம் கொன்றது துவங்கி, சில வட மாநிலங்களில் கணவர்கள் அச்சத்துடனேயே வாழும் நிலை உருவாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பூஜா என்னும் பெண், தன் கணவரான பிக்குவை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி Gaya என்னுமிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், வீட்டுக்குத் திரும்பும் வழியில், தன் காதலனான கமலேஷ் யாதவ் என்பவருடன் சேர்ந்து, பிக்கு மீது காரை ஏற்றிக் கொன்றுள்ளார் பூஜா.
பிக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பூஜாவை பொலிசார் கைது செய்ய, விசாரணையில் தன் காதலனுடன் சேர்ந்து தன் கணவரைக் கொலை செய்ததை பூஜா ஒப்புக்கொண்டுள்ளார்.
தலைமறைவாகிவிட்ட கமலேஷ் யாதவை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.