25
உலகம்செய்திகள்

கணவனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற மனைவி: பின்னர் நடந்த பயங்கரம்

Share

மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தன் கணவனை அழைத்துச் சென்ற பெண்ணொருவர், அவர் மீது காரை ஏற்றிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் வாழும் கணவர்கள் எல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் வாழவேண்டும் போலிருக்கிறது.

ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவியான சோனம் கொன்றது துவங்கி, சில வட மாநிலங்களில் கணவர்கள் அச்சத்துடனேயே வாழும் நிலை உருவாகியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பூஜா என்னும் பெண், தன் கணவரான பிக்குவை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி Gaya என்னுமிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், வீட்டுக்குத் திரும்பும் வழியில், தன் காதலனான கமலேஷ் யாதவ் என்பவருடன் சேர்ந்து, பிக்கு மீது காரை ஏற்றிக் கொன்றுள்ளார் பூஜா.

பிக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பூஜாவை பொலிசார் கைது செய்ய, விசாரணையில் தன் காதலனுடன் சேர்ந்து தன் கணவரைக் கொலை செய்ததை பூஜா ஒப்புக்கொண்டுள்ளார்.

தலைமறைவாகிவிட்ட கமலேஷ் யாதவை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...