சீனா தனது ஊடக பிரதானிக்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனவின் ரினமன் சதுக்கத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட சீனா ஊடக பிரதானி ஜிம்மி லாய்க்கு அந்நாட்டு நீதிமன்றத்தால் 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட நினைவு நிகழ்வில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக கூடியதற்காக இத் தண்டனை வழங்கப்பட்டுள்ள சீனா தெரிவித்துள்ளது.
அத்தோடு ஜிம்மி லாய் உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஏனையவர்களுக்கும் சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது.
சீன இராணுவத்தினால் கடந்த 1989 ஆம் ஆண்டு ஆணி மாதம் 4 ஆம் திகதி சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள ரினமன் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
அச் சம்பவத்துக்கு சர்வதேச ரீதியாக கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், பல ஆயிரக்கணக்கான மக்கள் தடையையும் மீறி இன்றும் ஆர்ப்பாட்டங்களிலும், நினைவேந்தலிலும் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வுகள் தற்போது ஹொங்கொங்கில் பாரிய அளவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சீனா ஊடக பிரதானி ஜிம்மி லாய் சிறையில் அடைக்கப்பட்டமையை பல சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளது.
#world
Leave a comment