r
உலகம்செய்திகள்

ஊடக பிரதானிக்கு 13 மாத சிறைத்தண்டனை!

Share

சீனா தனது ஊடக பிரதானிக்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனவின் ரினமன் சதுக்கத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட சீனா ஊடக பிரதானி ஜிம்மி லாய்க்கு அந்நாட்டு நீதிமன்றத்தால் 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட நினைவு நிகழ்வில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக கூடியதற்காக இத் தண்டனை வழங்கப்பட்டுள்ள சீனா தெரிவித்துள்ளது.

அத்தோடு ஜிம்மி லாய் உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனையவர்களுக்கும் சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது.

சீன இராணுவத்தினால் கடந்த 1989 ஆம் ஆண்டு ஆணி மாதம் 4 ஆம் திகதி சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள ரினமன் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

அச் சம்பவத்துக்கு சர்வதேச ரீதியாக கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், பல ஆயிரக்கணக்கான மக்கள் தடையையும் மீறி இன்றும் ஆர்ப்பாட்டங்களிலும், நினைவேந்தலிலும் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வுகள் தற்போது ஹொங்கொங்கில் பாரிய அளவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனா ஊடக பிரதானி ஜிம்மி லாய் சிறையில் அடைக்கப்பட்டமையை பல சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...