சென்னையில் அமோக தீபாவளி விற்பனை: பட்டாசு குப்பைகள் 151 மெட்ரிக் டன் அகற்றப்பட்டன!

1334083

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி நாளில் மழை இல்லாததால் பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்றது.

சென்னையில், குடும்பம் குடும்பமாக மக்கள் தீவுத்திடலுக்குச் சென்று பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். அவ்வப்போது சிறிது நேரம் மழை பெய்தாலும், அது உடனடியாக நின்றதால், தீபாவளிப் பட்டாசு விற்பனை களைகட்டியது. சென்னையில் பல பகுதிகளில் உள்ள கடைகளில் கடைசி நேரத்தில் விற்பனை சூடு பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த 3 நாட்களில் சென்னையில் பட்டாசு வெடித்ததன் மூலம் சேகரிக்கப்பட்ட 151 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 15 மண்டலங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் இந்தக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகபட்சமாகப் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்ட மண்டலங்கள்:
தண்டையார்பேட்டை மண்டலம்: 17 மெட்ரிக் டன்
ஆலந்தூர் மண்டலம்: 13 மெட்ரிக் டன்
கோடம்பாக்கம் மற்றும் பெருங்குடி மண்டலங்கள்: தலா 12 மெட்ரிக் டன்.

Exit mobile version