tamilni 51 scaled
உலகம்செய்திகள்

பாரிஸ் ரயில் நிலையத்தில் திடீரென தீயிட்டு பயங்கரவாத தாக்குதலை நடத்திய நபர்! அடையாளம் தெரிந்தது

Share

பாரிஸ் ரயில் நிலையத்தில் திடீரென தீயிட்டு பயங்கரவாத தாக்குதலை நடத்திய நபர்! அடையாளம் தெரிந்தது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில், பயங்கரவாத தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

பாரிஸின் Gare De Lyon ரயில் நிலையத்தில் Sagou Gouno Kassogue (32) என்ற நபர், திடீரென தனது பையில் தீயிட்டு கொளுத்தி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார்.

அத்துடன் அவர் பயணிகள் மீது கத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.

காலை 8 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து Kassogue பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டார்.

தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை வட்டாரம் கூறுகையில், ‘அவர் முதலில் தனது பையை பற்ற வைத்தார். பின்னர் ஒரு Escalator மூலம் சீரற்ற முறையில் மக்களை தாக்குவது போல் தோன்றியது’ என தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் லேசான காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Kassogue மாலியில் இருந்து 2016ஆம் ஆண்டு இத்தாலிக்கு வந்துள்ளார், அத்துடன் புகலிடக் கோரிக்கையைத் தொடர்ந்ததால் அவருக்கு குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் தீவிர மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், இந்த வார இறுதியில் அவர் டுரினில் உள்ள ஒரு மனநல மருத்துவரை சந்திக்க இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
images 10 1
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன்...

1200 675 25395250 thumbnail 16x9 1
செய்திகள்உலகம்

சிறுவர்களுக்கு எதற்கு இரத்த அழுத்தம்? இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இருமடங்காக...

images 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறைச்சாலை போதைப்பொருள் வலைப்பின்னல்: மஹர முன்னாள் களஞ்சியக் காப்பாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...

c062bcf6aceaa92908367ec4a579f375a27fd715ccd5277c234a953549da3bc8
உலகம்செய்திகள்

மதுரோவை உடனடியாக விடுதலை செய்: அமெரிக்காவின் நடவடிக்கையை மேலாதிக்கச் செயல் எனச் சீனா சாடல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்துள்ளமைக்குச் சீனா தனது...