முன்னாள் இராணுவச் சிப்பாய் கழுத்தறுத்துப் படுகொலை! விசாரணை தீவிரம்
உலகம்செய்திகள்

தாயின் வெறிச்செயல்!! குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை!

Share

தாயின் வெறிச்செயல்!! குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது 4 வயது மகளை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் தெலங்கானா ஐதராபாத் தராபாத், குஷாய் குடாவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கல்யாணி(22). இவர் டிரைவர் வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. பின்பு 2019 ஆம் ஆண்டு தன்விதா என்ற பெண்குழந்தை பிறந்தது. தற்போது, அந்த குழந்தைக்கு 4 வயது ஆகிறது.

இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் இவர்கள் 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

இதனையடுத்து கல்யாணி, பெற்றோர் ஊரான செங்கன் மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு சென்றிந்தார். அங்கு அவருக்கு நவீன் குமார் என்ற 19 வயது இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்யாணி, பெற்றோர் இல்லாத சமயத்தில் நவீன் குமாரை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாய் இருந்துள்ளார்.

அப்போது, அவர்களுடைய கள்ளக்காதலுக்கு தன்விதா இடையூறாக இருந்துள்ளார், பின்பு குழந்தையை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து நேற்று முன்தினம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, உடல்நிலை சரியில்லாமல் குழந்தை இறந்து போனதாக கல்யாணி கூறியுள்ளார்.

குழந்தையின் இறப்பில் சந்தேகமடைந்த ரமேஷ் பொலிசில் புகார் அளித்தார். பின்பு, கல்யாணியை விசாரணை செய்த போது குழந்தையை கொன்றதாக தெரியவந்தது.

இதனையடுத்து, கல்யாணியை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...