20 17
இந்தியாஉலகம்செய்திகள்

பொங்கல் சேலைக்கு நன்றி தெரிவித்த பெண்ணால் நெகிழ்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின்

Share

பொங்கல் சேலைக்கு நன்றி தெரிவித்த பெண்ணால் நெகிழ்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் விலையில்லா பொங்கல் சேலைக்கு பெண் ஒருவர் நன்றி தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டில் 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் டாக்டர். மாளவிகா ஐயர் என்ற பெண் ஒருவர் தமிழக அரசு வழங்கிய விலையில்லா பொங்கல் சேலையை அணிந்திருந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில், “தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில், விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும்” என்று கூறியிருந்தார்.

இவரின் பதிவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...