24 66173e08a5dd2
இலங்கைஉலகம்செய்திகள்

சிரியாவில் ஈரானிய தூதரகம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

Share

சிரியாவில் ஈரானிய தூதரகம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் ஈரானிய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இராஜதந்திர நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திரிகள் தொடர்பிலான வியன்ன பிரகடனம் பூரணமாக பின்பற்றப்பட வேண்டுமென இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட வேண்டும் எனவும், ஏற்கனவே பிராந்திய வலயத்தில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளது.

ஈரானிய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டதாக ஈரான், ரஸ்யா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.எனினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எவ்வித கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...