24 66173e08a5dd2
இலங்கைஉலகம்செய்திகள்

சிரியாவில் ஈரானிய தூதரகம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

Share

சிரியாவில் ஈரானிய தூதரகம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் ஈரானிய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இராஜதந்திர நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திரிகள் தொடர்பிலான வியன்ன பிரகடனம் பூரணமாக பின்பற்றப்பட வேண்டுமென இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட வேண்டும் எனவும், ஏற்கனவே பிராந்திய வலயத்தில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளது.

ஈரானிய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டதாக ஈரான், ரஸ்யா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.எனினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எவ்வித கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.

Share
தொடர்புடையது
image 870x 696c94f879728
செய்திகள்உலகம்

கிரீன்லாந்து விவகாரம்: ட்ரம்ப்பின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது – போர்க்கொடி தூக்கும் ஐரோப்பியத் தலைவர்கள்!

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க...

MediaFile 10
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி.க்களின் ஓய்வூதிய ரத்து சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்காக அரசாங்கத்தால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற...

IMG 1275
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நடைபெறும் போது அரசியல் அதிரடி: தம்புத்தேகமவில் மாணவர்களுக்குப் பெரும் இடையூறு!

தம்புத்தேகம நகரில் நேற்று (17) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் கூட்டத்தினால் ஏற்பட்ட...

198399 yjkrdilbjr 1707748418
செய்திகள்இலங்கை

ரணில் விக்கிரமசிங்க மீதான நிதி மோசடி வழக்கு: மன்றாடியார் நாயகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் சென்றபோது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...