13 7
உலகம்செய்திகள்

சீனாவில் தீவிரமாக பரவும் HMPV… பிரித்தானியாவில் தற்போதைய நிலை

Share

சீனாவில் தீவிரமாக பரவும் HMPV… பிரித்தானியாவில் தற்போதைய நிலை

சீனாவில் பல மாகாணங்களில் தீவிரமாக வியாபித்துவரும் HMPV தொற்றால், உலக நாடுகள் தற்போது கலக்கத்துடன் கண்காணித்து வருகிறது.

HMPV பாதிப்புக்கு தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்பதுடன், வெளியாகும் தகவல்களில் பெரும்பாலான சீனா மருத்துவமனைகள் பாதிப்புக்குள்ளானவர்களால் நிரம்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் குளிர் காலத்தில் இதுபோன்ற காய்ச்சல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று என்றே இந்த விவகாரத்தில் சீனா பதிலளித்துள்ளது. இதனிடையே, இந்திய மாகாணமான கர்நாடகா அதிரடி நடவடிக்கையாக HMPV பாதிப்பு அறிகுறிகள் காணப்பட்டால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், முகக்கவசம் அணியவும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை கர்நாடகா மாகாணத்தில் மூவருக்கு HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் HMPV பரவல் தொடர்பில் பிரித்தானியாவில் இதுவரை பெரிய கவலை எதுவும் எழவில்லை என்றே கூறப்படுகிறது.

இருப்பினும் கடந்த 15 நாட்களில் HMPV பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என்றே தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது. மேலும், சீனாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. கோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறித்தும் சீனா இதுவரை உண்மையான தரவுகளை வெளியிடவில்லை.

இருமல், காய்ச்சல், தொண்டை புண், மூச்சுத்திணறல் மற்றும் மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடக்கத்தில் காணப்படலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாதிப்பு தீவிரமடைந்தால், நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியாக உருவாகலாம் என்றும் வயதானவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சாதாரணமாக லேசான அறிகுறிகளின் காரணமாக, சோதனைகள் பொதுவாக தேவையில்லை, ஆனால் மக்கள் தொடர்ந்து அறிகுறிகளைப் பற்றி கவலைப்பட்டால், அவர்கள் தங்கள் பொது மருத்துவரை நாடலாம் என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...