24 66245fcada09a
உலகம்செய்திகள்

கிம் ஜாங் உன்னுக்கு புகழாரம்: புதிய பாடலை வெளியிட்ட வடகொரிய அரசு

Share

கிம் ஜாங் உன்னுக்கு புகழாரம்: புதிய பாடலை வெளியிட்ட வடகொரிய அரசு

தமது நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னை(Kim Jong Un) “நட்பான தந்தை” மற்றும் “சிறந்த தலைவர்” என்று புகழ்ந்து ஒரு புதிய பாடலை வட கொரியா அரசு வெளியிட்டுள்ளது,

 

இது அவரது நிலையை மேம்படுத்துவதற்கான பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாகத் தோன்றுவதாக கூறப்படுகிறது

 

இந்தப் பாடலுக்கான காணொளி, அரசு கட்டுப்பாட்டில் உள்ள கொரிய மத்திய தொலைக்காட்சியில் புதன்கிழமை ஒளிபரப்பப்பட்டுள்ளது.

 

குழந்தைகள் முதல் துருப்புக்கள் வரை பல்வேறு பின்னணிகளைக் கொண்ட வட கொரியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், ‘சிறந்த தலைவரே பாடுவோம்” மற்றும் ‘ஒரு நட்பு தந்தையைப் பற்றி தற்பெருமை காட்டுவோம்” போன்ற வரிகளை மிக அதிகமாகப் பாடுவது இதில் இடம்பெற்றுள்ளது.

 

10,000 புதிய வீடுகளைக் கட்டி முடித்ததைக் குறிக்கும் விழாவின் ஒரு பகுதியாக, இசைக்குழுவுடன் இணைந்து கிம், இந்த பாடலை பார்த்த நேரடி நிகழ்ச்சியும் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வட கொரியாவை நிறுவியதில் இருந்து ஆட்சி செய்து வரும் கிம் குடும்ப வம்சம், அவர்களைச் சுற்றி ஆளுமை வழிபாட்டு முறைகளை உருவாக்குவதன் மூலம் அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை வலுப்படுத்தி வருகிறது.

 

வட கொரிய அரசு ஊடகம் சமீபத்தில் பொது விடுமுறைக்கு பயன்படுத்தும் பெயரை மாற்றியுள்ளது.

 

இதன்படி, நாட்டின் நிறுவனர் கிம் இல் சுங்கின் பிறந்த நாளைக் கொண்டாடும் வருடாந்த பொது விடுமுறையை “சூரியனின் நாள்” என்று அழைப்பதற்குப் பதிலாக, அரச ஊடகங்கள் பெரும்பாலும் “ஏப்ரல் விடுமுறை” என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளன.

 

இதுபோன்ற மாற்றங்கள் கிம், தனது முன்னோடிகளை நம்பாமல் தனது சொந்த காலில் நிற்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...