tamilni 325 scaled
உலகம்செய்திகள்

இவர்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும்: புடின் விருப்பம்…

Share

இவர்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும்: புடின் விருப்பம்…

ட்ரம்ப் அல்ல, ஜோ பைடன் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதுதான் தன் விருப்பம் என்று கூறியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.

நேற்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த புடின், ஜோ பைடன் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதுதான் தன் விருப்பம் என்று கூறியுள்ளார். காரணம், ஜோ பைடன் அதிக அனுபவம் வாய்ந்தவர், கணிக்கத்தக்கவர் என்று கூறினார் புடின். என்றாலும், அமெரிக்க மக்கள் நம்பும் எந்த தலைவருடனும் பணி புரிய ரஷ்யா தயாராக உள்ளது என்றார் அவர்.

ரஷ்யாவின் கண்ணோட்டத்தில், தான் ஜோ பைடன் ஜனாதிபதியாவதற்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் தெரிவித்தார் புடின்.

புடினிடம், ஜோ பைடனின் உடல் நிலை மோசமாகிவருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த புடின், அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட செய்திகளும் அதிகமாக பரவி வருகின்றன என்றார்.

நான் ஒரு மருத்துவர் அல்ல, ஜோ பைடனின் உடல் நலம் குறித்து நான் கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது என்று நான் கருதுகிறேன் என்று கூறிய புடின், நான் 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம், ஜோ பைடனை சுவிட்சர்லாந்தில் சந்தித்த நேரத்திலும் அவரது உடல் நலம் குறித்த செய்திகள் பரவிவந்தன. ஆனால், நான் அவரை சந்திக்கும்போது அவர் நல்ல நிலையில் இருந்தார்.

அவர் வலிமையற்றவராக, எதையும் செய்ய இயலாத நிலையில் இருந்ததாக பேசப்பட்டது. ஆனால், நான் அப்படி எதையும் பார்க்கவில்லை. அவர், அவர் கையிலிருந்த ஆவணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார், உண்மையாகச் சொன்னால், அப்போது நானும் என் கையிலிருந்த ஆவணங்களை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார் புடின்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...