6 3 scaled
உலகம்செய்திகள்

பிரான்சில் கதவை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மர்ம நபரை தேடும் பொலிஸார்

Share

பிரான்சில் கதவை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மர்ம நபரை தேடும் பொலிஸார்

பிரான்ஸ் நாட்டில் 30 வயது பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Montluc மாவட்டத்தின் லியோனின் 3வது வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் 30 வயது பெண்ணொருவர் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது தனது வீட்டில் அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தபோது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் அவரது வயிற்றில் இருமுறை கத்தியால் குத்தியுள்ளார் என்பது தெரிய வந்தது.

மேலும், அவரது வீட்டு வாசலில் ஸ்வஸ்திகா வர்ணம் பூசப்பட்டதைக் கண்டுபிடித்த பொலிஸார், கருப்பு உடை அணிந்த சந்தேக நபரைத் தேடும் நடவடிக்கையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

அத்துடன் அவர் யூதப் பெண் என்பது தெரிய வந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை அடுத்து பிரான்ஸ் யூத-விரோத தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து பிரான்சில் ‘857 யூத எதிர்ப்பு செயல்கள்’ நடந்துள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்சில் உள்ள யூதர்கள், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் யூத-விரோதத்தை அதிகரித்து, வன்முறையின் இலக்குகளாக ஆக்கிவிட்டதாக அஞ்சுவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...