24 66162821c4b5b
உலகம்செய்திகள்

இத்தாலியில் அதிர்ச்சி! நீர்மின் நிலையம் வெடிப்பு

Share

இத்தாலியில் அதிர்ச்சி! நீர்மின் நிலையம் வெடிப்பு

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெடிப்பு சம்பவத்தால் நாடு கடும் துயரில் ஆழ்ந்துள்ளது.

இத்தாலியின் வடக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பால் அந்நாடு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இதில் நான்கு பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

போலோக்னா(Bologna) நகரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் சுவினா ஏரியில்(Lake Suviana) உள்ள ஆலை ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.// ஆரம்ப தகவல்கள் மூன்று பேர் உயிரிழந்ததாக கூறினாலும், பின்னர் இந்த எண்ணிக்கை நான்கு பேராக உயர்ந்துள்ளது.

தகவல்களின்படி, வழக்கமான பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தபோது நீருக்கடியில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிப்பின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால், ஆலையின் நிலத்தடி கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதி சுமார் 30 மீட்டர் ஆழத்தில் இருப்பதால் மீட்பு குழுக்களுக்கு மிகப்பெரிய சவால் இருந்து வருகிறது.

காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்கான தேடல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் படுகாயமடைந்து சிலர் விமானம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வருகிறது. அதிகாரிகள் இதுவரை நீர்மின் நிலையத்தில் வெடிப்பு ஏற்படுத்திய காரணத்தை கண்டறியவில்லை.

ஆலையின் உரிமையாளரான Enel நிறுவனம், எஞ்சியிருக்கும் அனைத்து தொழிலாளர்களையும் வெளியேற்றி, அவசர கால மீட்பு பணியாளர்களுடன் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...