24 66162821c4b5b
உலகம்செய்திகள்

இத்தாலியில் அதிர்ச்சி! நீர்மின் நிலையம் வெடிப்பு

Share

இத்தாலியில் அதிர்ச்சி! நீர்மின் நிலையம் வெடிப்பு

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெடிப்பு சம்பவத்தால் நாடு கடும் துயரில் ஆழ்ந்துள்ளது.

இத்தாலியின் வடக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பால் அந்நாடு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இதில் நான்கு பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

போலோக்னா(Bologna) நகரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் சுவினா ஏரியில்(Lake Suviana) உள்ள ஆலை ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.// ஆரம்ப தகவல்கள் மூன்று பேர் உயிரிழந்ததாக கூறினாலும், பின்னர் இந்த எண்ணிக்கை நான்கு பேராக உயர்ந்துள்ளது.

தகவல்களின்படி, வழக்கமான பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தபோது நீருக்கடியில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிப்பின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால், ஆலையின் நிலத்தடி கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதி சுமார் 30 மீட்டர் ஆழத்தில் இருப்பதால் மீட்பு குழுக்களுக்கு மிகப்பெரிய சவால் இருந்து வருகிறது.

காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்கான தேடல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் படுகாயமடைந்து சிலர் விமானம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வருகிறது. அதிகாரிகள் இதுவரை நீர்மின் நிலையத்தில் வெடிப்பு ஏற்படுத்திய காரணத்தை கண்டறியவில்லை.

ஆலையின் உரிமையாளரான Enel நிறுவனம், எஞ்சியிருக்கும் அனைத்து தொழிலாளர்களையும் வெளியேற்றி, அவசர கால மீட்பு பணியாளர்களுடன் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...