4 19
உலகம்செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை! புடினின் அறிவிப்புக்காக காத்திருக்கும் இஸ்தான்புல்

Share

இஸ்தான்புல்லில் நாளை நடைபெறவிருக்கும் ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்க மாட்டார் என்று உக்ரைனின் அரசாங்க சார்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் செய்தித்தாள் ஒன்று, புடினின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ், பேச்சுவார்த்தையில் மாஸ்கோவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று கூறியதையடுத்து குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், துருக்கியில் கீவ் மற்றும் மொஸ்கோ இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்தார்.

இதனையடுத்து வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாகக் கூறியிருந்தாலும் , புடின் கலந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கிரெம்ளின் இதுவரை அமைதியாக இருந்து வருகிறது.

மாஸ்கோ தனது குழு உறுப்பினர்களின் பெயரை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இதன்படி துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை அங்காராவில் சந்திப்பதை ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் புடின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டால் தானும் எர்டோகனும் இஸ்தான்புல்லுக்கு பயணிக்கத் தயாராக இருப்பதாகக் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...