4 19
உலகம்செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை! புடினின் அறிவிப்புக்காக காத்திருக்கும் இஸ்தான்புல்

Share

இஸ்தான்புல்லில் நாளை நடைபெறவிருக்கும் ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்க மாட்டார் என்று உக்ரைனின் அரசாங்க சார்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் செய்தித்தாள் ஒன்று, புடினின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ், பேச்சுவார்த்தையில் மாஸ்கோவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று கூறியதையடுத்து குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், துருக்கியில் கீவ் மற்றும் மொஸ்கோ இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்தார்.

இதனையடுத்து வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாகக் கூறியிருந்தாலும் , புடின் கலந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கிரெம்ளின் இதுவரை அமைதியாக இருந்து வருகிறது.

மாஸ்கோ தனது குழு உறுப்பினர்களின் பெயரை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இதன்படி துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை அங்காராவில் சந்திப்பதை ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் புடின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டால் தானும் எர்டோகனும் இஸ்தான்புல்லுக்கு பயணிக்கத் தயாராக இருப்பதாகக் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...