rtjy 186 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்த புடின்

Share

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்த புடின்

கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

மேலும், அதைத் தவிர அமைதியை ஏற்படுத்த வேறு வழியில்லை எனவும் கூறியுள்ளார்.

இதற்கமைய, இஸ்ரேலின் இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ளவே முடியது என்றும், இந்த தாக்குதல் லெனின்கிராட் மீதான நாஜி படை தாக்குதலுக்கு நிகரானது என்றும் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் இடையே 8 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்து அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரை விட ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொள்ளப்படுவதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகர் மீது இஸ்ரேல் அதி தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பில் கடைசியாக இருக்கும் ஒவ்வொருவரையும் வேட்டையாடுவோம் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல், தற்போது தரைவழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

நேற்று வரை ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் காசா நகர கட்டிடங்கள் மீது பீரங்கி குண்டுகளால் வான்வழி தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது தரை வழி தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக காசாவை சுற்றி சுமார் 3 இலட்சம் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு தாக்குதல் நடைபெற்று வருகிறது.

காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்குள்ளும் புகுந்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது.

இதுவரை உயிரிழந்த பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 2000 தாண்டிய நிலையில், இஸ்ரேலின் தரை வழி தாக்குதலால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...