17 32
உலகம்செய்திகள்

ஹமாஸின் பிடியிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய இஸ்ரேலிய பெண்கள்

Share

ஹமாஸின் பிடியிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய இஸ்ரேலிய பெண்கள்

ஹமாஸினால் சிறைபிடிக்கப்பட்ட நான்கு இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகள் இன்றையதினம்(25.01.2025) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பணயக்கைதிகள், போர்நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் இரண்டாவது சுற்றில் விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர்.

இதற்கு பதிலாக இஸ்ரேல் 200 பலஸ்தீனியக் கைதிகளை விடுத்துள்ளது.

எனினும், அர்பெல் யூஹுட்(Arbel Yehud) எனப்படும் பணயக்கைதி விடுவிக்கப்படாததால், போர்நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த பெண் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி, தனது காதலுடன் சென்றுக்கொண்டிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டிருந்தார்.

இதன்போது, அவரின் சகோதரர் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் எதிர்வரும் வாரம் இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்படுவார் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், பணயக்கைதிகளின் விடுதலையை உலகம் கொண்டாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா தொடர்ந்தும் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விடுதலையான பணயக்கைதிகளின் பெற்றோரிடம் தொலைபேசியில் கலந்துரையாடிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து, அனைத்து பணயக்கைதிகளையும் மீட்டு இஸ்ரேலுக்கு கொண்டு வருவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...