5 12 scaled
உலகம்செய்திகள்

பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம்… ஊக்குவிக்கும் இஸ்ரேல் பிரதமர்

Share

பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம்… ஊக்குவிக்கும் இஸ்ரேல் பிரதமர்

ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம் என இஸ்ரேல் பிரதமர் பொதுமக்களை ஊக்குவித்துள்ள நிலையில், துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இஸ்ரேல் மக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்வதை ஊக்குவிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார்.

இம்மாதம், அதாவது, அக்டோபர் 7ஆம் திகதி, திடீரென ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நிகழ்த்தியதில் ஏராளம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். ஆயுதங்கள் வைத்திருந்த சிலர், தங்கள் கிராமங்களுக்காக எதிரியை எதிர்த்து போராடினார்கள், அதில் சிலர் வெற்றியும் பெற்றார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், என்னை நானே காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என எண்ணம் பலருக்கும் உருவாகியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் மக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்வதை ஊக்குவிப்பதாக இஸ்ரேல் பிரதமரும் கூற, மக்கள் துப்பாக்கிகள் வாங்குவதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளார்கள்.

இதற்கிடையில், இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

உண்மையில், இஸ்ரேல் கடுமையான துப்பாக்கி விதிகள் கொண்ட நாடாகும். அந்நாட்டில், பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு சட்டப்படி அனுமதி கிடையாது.

ஆனால், அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து மக்கள் துப்பாக்கிகள் வாங்க விண்ணப்பிக்கத் துவங்கியுள்ளார்கள்.

அதே நேரத்தில், அரசும் துப்பாக்கி விதிகளை தளர்த்தியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள், மருத்துவ அவசர உதவிக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நல்ல உடல் நிலையுடன் இருக்கும் மற்றும் குற்றப்பின்னணி எதுவும் இல்லாத பொதுமக்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன் 50 துப்பாக்கிக்குண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது 100 குண்டுகள் வைத்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...

16 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: காரில் தப்பியோடிய கும்பலுக்கு வலைவீச்சு!

யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த, ஹீன்வல வனஜீவராசிகள் பாதுகாப்புச் சாவடிக்கு அருகாமையில் இன்று (மார்ச்...