6 11 scaled
உலகம்செய்திகள்

சுவிஸ் இளம்பெண்ணை கொலை செய்த இந்தியர்

Share

சுவிஸ் இளம்பெண்ணை கொலை செய்த இந்தியர்

சுவிஸ் நாட்டு இளம்பெண் ஒருவரை இந்தியாவுக்கு வரவழைத்துக் கொலை செய்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தங்களால் இந்தியா வர இயலாது என தெரிவித்துள்ளதால் வழக்கு சிக்கலாகியுள்ளது.

இந்தியாவின் டெல்லியிலுள்ள திலக் நகர் என்னுமிடத்தில் வெளிநாட்டவரான அழகிய இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

விசாரணையில், அவரது பெயர் நினா பெர்கெர் (Nina Berger, 30) என்பதும், அவர் சுவிஸ் நாட்டவர் என்பதும் தெரியவந்தது.

அவரை குர்பிரீத் சிங் என்னும் இந்தியர் இந்தியாவுக்கு வரவழைத்து கொலை செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர். விசாரணையில் சிங் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கொடுத்துவருகிறார்.

முதலில் தனக்கு அந்தப் பெண்ணைத் தெரியாது என்று கூறிய சிங், பின்னர் தான் அவரைக் காதலித்ததாகவும், அவர் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கொல்லப்பட்ட நினாவின் உறவினர்கள் தங்களால் இந்தியா வர இயலாது என தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது உடலை உடற்கூறு ஆய்வின்போது, அவரது உறவினர்கள் யாராவது உடன் இருக்கவேண்டும்.

அப்படியிருக்கும் நிலையில், தங்களால் இந்தியா வர இயலாது என நினாவின் உறவினர்கள் கூறியுள்ளதால், நினாவின் அடையாளத்தை உறுதி செய்ய, அவர்கள் தரப்பிலிருந்து நினாவின் கைரேகை முதலான விடயங்கள் அனுப்பப்படவேண்டும்.

ஆகவே, இந்திய பொலிசார் அந்த தகவல்களை சுவிட்சர்லாந்திலிருந்து பெறுவது தொடர்பில் வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதற்கிடையில், முன்னுக்குப் பின் முரணாக பேசிக்கொண்டிருக்கும் சிங்கை ஐந்து நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...