tamilnic 5 scaled
உலகம்செய்திகள்

காசாவில் சிதைந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம்

Share

காசாவில் சிதைந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம்

காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் 800 பேர் வரை தங்க வைக்கப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் 75 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல் 100 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிணைக் கைதிகள் பரிமாற்றத்தின் மூலம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காசாவில் 800 பேர் வரை தங்க வைக்கப்பட்டு இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இதன்படி இது தொடர்பாக ஐ.நா அதிகாரி தாமஸ் வைட் கருத்து தெரிவித்த போது,

இன்று மதியம் கான் யூனிஸ் பகுதியில் உள்ள ஐ.நா பயிற்சி மையத்தை இரண்டு டேங்கர்கள் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உலக சுகாதார மையமும், ஐக்கிய நாடுகளின் UNRWA அமைப்பும் பயிற்சி மையத்தை அடைய முயற்சிக்கின்றன என டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...