rtjy 175 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இஸ்ரேலில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

இஸ்ரேலில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை தேடுவதற்கு உத்தேசித்துள்ள இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் போது மூன்று நிறுவனங்களின் பரிந்துரை நடைமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) உறுதிப்படுத்தியுள்ளது.

“இஸ்ரேலில் வேலை தேடும் சாத்தியமுள்ள பணியாளர்கள் வெளிவிவகார அமைச்சு, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் முக்கியமாக இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையத்திடம் (PIBA) அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எந்தவொரு விசா நடைமுறையையும் செயற்படுத்துவதற்கு இந்த மூன்று நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகளையும் அனுமதியையும் பெற வேண்டும்” என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், அங்கீகரிக்கப்பட்ட மூன்று நிறுவனங்களின் பரிந்துரைகள் இன்றி அனுமதி வழங்க உள்ளூராட்சி அதிகாரிகள் சிலர் குறுக்கு வழியில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுமட்டுமன்றி 100க்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை தற்போது பெற்றுள்ளதாகவும், அதில் 15 விசா அங்கீகரிக்கப்பட்ட கோப்புகள் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....