24 6628e0e6d8b99
உலகம்செய்திகள்

எதிரிகளுக்கு பயம் வரும்… பல பில்லியன் இராணுவ நிதியுதவிக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல்

Share

எதிரிகளுக்கு பயம் வரும்… பல பில்லியன் இராணுவ நிதியுதவிக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல்

13 பில்லியன் டொலர் இராணுவ நிதி உதவிக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்ததற்கு இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது, இஸ்ரேலின் எதிரிகளுக்கு கண்டிப்பாக பயத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக பக்கத்தில் இது தொடர்பில் கருத்து பகிர்ந்துள்ள அமைச்சர் Israel Katz, இஸ்ரேலுக்கான நிதி உதவியை பெரும்பான்மை ஒப்புதலுடன் நிறைவேற்றியதற்காக அமெரிக்க செனட்டிற்கு நன்றி கூறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நமது கூட்டணியின் வலிமைக்கு தெளிவான சான்றாக உள்ளது என்றும் நமது எதிரிகள் அனைவருக்கும் இது பயத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

காஸாவில் போர் தொடங்கி 200 நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே அமெரிக்கா 13 பில்லியன் டொலர் நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அக்டோபர் 7ம் திகதி தொடங்கி காஸா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது.

இதுவரை பெண்கள், சிறார்கள் உட்பட 34,183 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...