24 6628e0e6d8b99
உலகம்செய்திகள்

எதிரிகளுக்கு பயம் வரும்… பல பில்லியன் இராணுவ நிதியுதவிக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல்

Share

எதிரிகளுக்கு பயம் வரும்… பல பில்லியன் இராணுவ நிதியுதவிக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல்

13 பில்லியன் டொலர் இராணுவ நிதி உதவிக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்ததற்கு இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது, இஸ்ரேலின் எதிரிகளுக்கு கண்டிப்பாக பயத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக பக்கத்தில் இது தொடர்பில் கருத்து பகிர்ந்துள்ள அமைச்சர் Israel Katz, இஸ்ரேலுக்கான நிதி உதவியை பெரும்பான்மை ஒப்புதலுடன் நிறைவேற்றியதற்காக அமெரிக்க செனட்டிற்கு நன்றி கூறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நமது கூட்டணியின் வலிமைக்கு தெளிவான சான்றாக உள்ளது என்றும் நமது எதிரிகள் அனைவருக்கும் இது பயத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

காஸாவில் போர் தொடங்கி 200 நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே அமெரிக்கா 13 பில்லியன் டொலர் நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அக்டோபர் 7ம் திகதி தொடங்கி காஸா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது.

இதுவரை பெண்கள், சிறார்கள் உட்பட 34,183 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...