T2WEHW2MONMHBBBKV2777SU7DU scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சுட்டுக்கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி சர்ச்சை பேச்சு

Share

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சுட்டுக்கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி சர்ச்சை பேச்சு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக்கொல்ல வேண்டிய நேரம் இது தான் என்று கேரள காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் சர்ச்சையாக பேசியுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு திருப்பி கொடுப்பதாக நினைத்து நடைபெற்று வரும் போரில் இதுவரை 12,000 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.

எந்த நாடுகள் கூறினாலும், ஐ.நாவின் போர் நிறுத்த கோரிக்கைகளையும் கேட்காமல் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் படையினரை முழுவதுமாக ஒழிக்கும் வரை போர் நடைபெறும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருந்தார்.

இந்த போரினால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் இஸ்ரேலை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போராட்டங்களும், பேரணியும் நடத்தி வருகின்றனர். முக்கியமாக, பாலஸ்தீன மக்களுக்கு கேரளாவில் அதிகமான ஆதரவு உள்ளது.

அந்தவகையில் கேரளாவில் நடந்த பாலஸ்தீன ஒற்றுமைப் பேரணியில் காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் கலந்து கொண்டு பேசுகையில், “இரண்டாம் உலகப் போருக்கு பின்பு, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு நியூரம்பெர்க் என்ற விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது குற்றவாளிகள் விசாரணையின்றி சுட்டுக் கொல்லப்படுவார்கள்.

அதே போல, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றவாளியாகர் நிற்கிறார். அவரை விசாரணையின்றி சுட்டுக்கொல்ல வேண்டிய நேரம் இது தான்” என பேசியுள்ளார். இவர் பேசிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
14 7
இலங்கைசெய்திகள்

வடக்கில் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படக்கூடாது! பொன்சேகா

வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள்...

13 9
இலங்கைசெய்திகள்

யாழில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு...

11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...