rtjy 66 scaled
உலகம்செய்திகள்

போர் நிறுத்தம் குறித்து பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் கோரிக்கை

Share

போர் நிறுத்தம் குறித்து பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் கோரிக்கை

காசா போரை நிறுத்த வேண்டுமாயின் ஹமாஸ் அமைப்பின் தலைவரை கண்டுபிடித்து கொல்ல காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.

ஹமாஸ் காஸா தலைவர் யாஹ்யா சின்வாரை (Yahya Sinwar) தங்கள் இராணுவம் ஒழிக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அதற்கு முன்னதாக காசா மக்கள் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தால், அவர்கள் அவரைக் கொல்ல வேண்டும், அப்போது தான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் சுரங்கப்பாதைகளுக்குள் தப்பிச் செல்வதைத் தடுக்கவும், படைவீரர்களைத் தாக்க நிர்ப்பந்திக்கவும் இஸ்ரேலிய இராணுவம் காலாட்படை மற்றும் டாங்கிகளைப் பயன்படுத்தியபோது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் ஒவ்வொரு பட்டாலியனையும் அழித்து வருவதாகவும், வடக்கு மற்றும் தெற்கிலிருந்து காசா நகரில் உள்ள பயங்கரவாத மையங்களை தாக்குவதாகவும் கேலண்ட் கூறியுள்ளார்.

இதேவேளை யுத்தம் முடிவடையும் போது காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்காது என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் காசாவில் இனி ஹமாஸ் இருக்காது,அச்சுறுத்தல்களுடன் தலை தூக்கும் எவருக்கும் எதிராக எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க இஸ்ரேலுக்கு முற்றிலும் சுதந்திரம் உள்ளது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...