உலகம்செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் போர்: இஸ்ரேல் தீட்டியுள்ள புதிய திட்டம்!

Share

இஸ்ரேல் ஹமாஸ் போர்: இஸ்ரேல் தீட்டியுள்ள புதிய திட்டம்!

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தத்தின் பின்னர் ஹமாஸ் படையினரின் ரகசிய சுரங்கப்பாதைகளுக்குள் கடல் நீரை நிரப்ப இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தமானது முடிவு பெறாத நிலையில் அண்மையில் 7 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கமைய இஸ்ரேல் புதிய போர் திட்டமொன்றை தீட்டியுள்ளது.

அதாவது காசா பகுதியில் ஹமாஸ் படையினர் பெரிய பலமாக இருக்கும் ரகசிய சுரங்கப்பாதைகளில் கடல் நீரை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய தரைக்கடலின் நீரை கொண்டு கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஹமாஸின் ரகசிய சுரங்கப்பாதையை நிரப்பபுவதற்கு சில வாரங்களாவது எடுக்கும்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை நிலத்தடிக்கு அனுப்பும் திறன் கொண்ட ஐந்து மோட்டார்களை வடிவமைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனினும் இந்த திட்டத்தின் மூலம் காசாவிலுள்ள நல்ல தண்ணீர் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த திட்டத்தை இஸ்ரேல் நடைமுறைபடுத்தினால் பல உலக நாடுகளின் கண்டனங்களை இஸ்ரேல் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...