tamilni 109 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம்….! ஜோபைடனின் அவசர தொலைபேசி அழைப்பு

Share

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம்….! ஜோபைடனின் அவசர தொலைபேசி அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தம் செய்ய அமெரிக்கா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

குறித்த தகவலை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

போர் நிறுத்தம் தொடர்பில் உலகின் பல பாகங்களிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் இஸ்ரோல் அதனை நிராகரித்து வருகின்றது.

அத்துடன் ஹமாஸ் இயக்கத்தை அழிக்கும் வரை போர் நிறுத்தப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெத்தன்யாகு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை மீட்பது குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

பிணைக் கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன் காயமுற்றவர்கள் மருத்துவ வசதிகளின்றி அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் உணவு மருந்து நீர் மற்றும் மின்சாரம் ஆகியன காசாவில் தடைப்பட்டுள்ள நிலையில் போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதாக ஜக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

போரை நிறுத்தக்கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...