உலகம்செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: ஜோ பைடன் அழைப்பை நிராகரித்த பாலஸ்தீன ஜனாதிபதி

Share
tamilni 289 scaled
Share

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: ஜோ பைடன் அழைப்பை நிராகரித்த பாலஸ்தீன ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பை பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே தீவிரமான போர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

ஹமாஸ் படையினரை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேலிய ராணுவம் காசா நகரை சுற்றி வளைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.

சமீபத்தில் காசா நகரில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர், ஆனால் இஸ்ரேலிய ராணுவம் இதற்கு மறுப்பு தெரிவித்தது.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அத்துடன் காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை என வாதிடினார்.

இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக உதவி செய்யுமாறும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் கோரிக்கை வைத்து இருந்தார்.

இதன் அடிப்படையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவையும், பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் இருவரையும் தொலைபேசி மூலம் கலந்துரையாட வைக்கும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சென்று இருந்த போது முயற்சி செய்துள்ளார்.

ஆனால் காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிப்பது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேச்சுவார்த்தை அழைப்பை பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் ஏற்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...