tamilni 289 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: ஜோ பைடன் அழைப்பை நிராகரித்த பாலஸ்தீன ஜனாதிபதி

Share

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: ஜோ பைடன் அழைப்பை நிராகரித்த பாலஸ்தீன ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பை பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே தீவிரமான போர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

ஹமாஸ் படையினரை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேலிய ராணுவம் காசா நகரை சுற்றி வளைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.

சமீபத்தில் காசா நகரில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர், ஆனால் இஸ்ரேலிய ராணுவம் இதற்கு மறுப்பு தெரிவித்தது.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அத்துடன் காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை என வாதிடினார்.

இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக உதவி செய்யுமாறும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் கோரிக்கை வைத்து இருந்தார்.

இதன் அடிப்படையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவையும், பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் இருவரையும் தொலைபேசி மூலம் கலந்துரையாட வைக்கும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சென்று இருந்த போது முயற்சி செய்துள்ளார்.

ஆனால் காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிப்பது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேச்சுவார்த்தை அழைப்பை பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் ஏற்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...