rtjy 227 scaled
உலகம்செய்திகள்

இதுவே இறுதி யுத்தம் எக்காளமிடும் இஸ்ரேல்….! போரை திசை மாற்றும் அமெரிக்கா

Share

இதுவே இறுதி யுத்தம் எக்காளமிடும் இஸ்ரேல்….! போரை திசை மாற்றும் அமெரிக்கா

இஸ்ரேலுக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் நிறுத்தம் தொடர்பில் எவ்விதகோரிக்கையையும் முன்வைக்கவில்லை என இஸ்ரேலின் அமைச்சர் தெரிவித்தாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற War cabinet கூட்டத்திலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விஜயம் மூலம் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகி உள்ளது.

மேலும், இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு எதிரான யுத்தத்தை ”இறுதி யுத்தம்” என தெரிவித்துள்ளதுடன், ஹமாஸ் இயக்கத்தை அழித்தொழிப்பதில் முனைப்புடன் இருந்து வருகின்றது. போருக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரிஷி சுனாக் ஆகியோரது விஜயங்கள் அமைந்துள்ளன.

இதனிடையே, இஸ்ரேலுக்கான இராணுவ உதவியாக 10 பில்லியன் டொலர்களை அனுமதிக்க வேண்டும் என ஜோ பைடன் காங்கிரஸிடம் கேட்க திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது.

எனினும், இஸ்ரேலுக்கு அழிவுகரமான, நியாயமற்ற ஆயுதங்களை ஜோ பைடன் நிர்வாகம் வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த அமெரிக்க வெளிவிவகார அதிகாரி ஒருவர் தமது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதலால் காசா பகுதியில் இதுவரை 3,700 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே அந்த அதிகாரி இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அள்ளித் தருவது என்பது குறுகிய நோக்குடையது, நியாயமற்றது, இதனால் பேரழிவு மட்டுமே ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசா மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, பக்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகள் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளன.

ஐ.நா. மற்றும் அதன் மூத்த தலைவர்களும் இஸ்ரேலின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

இஸ்ரேலின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படி மருத்துவமனைகளும், மருத்துவப் பணியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் காசாவில் போர் நிறுத்தத்தை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா.சபையிடம் 22 நாடுகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் வசிக்கும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு இடங்களில் அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடத்தப்படலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...